நாக தோஷம் கழிப்பதாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் : கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்து கோட்டையில் உள்ள ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரமத்தை நடத்தி வரும் சாமியார் முனுசாமியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

முனுசாமி என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்த கல்லூரி மாணவி ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிபிசிஐடி போலீசார் விசாரணையில், சாமியார் முனுசாமி, அந்த மாணவிக்கு நாகதோசம் இருப்பதாக பெற்றோரிடம் கூறி ஆசிரமத்துக்கு அடிக்கடி வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து பின் தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.