நாங்கள் தான் தாக்குதல் நடத்தி கொன்றோம்! ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு


குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாங்கள் தான் தாக்குதல் நடத்தி கொன்றோம்! ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

AP

குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள், இந்துக்களுக்கு 100 இ-விசாக்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதனிடையில் குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைத்து தரப்பும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.