பாக்., சிறையில் இருந்து 20 இந்திய மீனவர்கள் விடுதலை| Dinamalar

கராச்சி,-பாகிஸ்தான் சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்த, 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்கள் 20 பேரை, 2018 ஜூனில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்படை கைது செய்தது. இவர்கள், கராச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில், இவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, எதி அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பின் வாயிலாக, இவர்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் ஒப்படைக்கப்படுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.