ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், நாளை (20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படிருந்தன.

இந்த சூழலில் முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். இதனால் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.