#BigBreaking || ஓபிஎஸ்-க்கு பெரும் அடி.! முக்கிய அஸ்திவாரமே சற்றுமுன் எடப்பாடி இல்லத்தில்.! ஓங்கும் ஈபிஎஸ் என்ற ஒற்றை தலைமை.!

தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் வகையில் எடப்பாடிபழனிசாமி இன்று ஆறாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மொத்தம் உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 64 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை எடப்பாடிபழனிசாமி பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் நீரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

தேனி மாவட்ட செயலாளரை தவிர்த்து, மற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

தேனி மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலைராஜ், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ராமர், இளைய நம்பி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ஜக்கையன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ண பிரகாஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர், சின்னமனூர் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஆண்டிபட்டி பேரூர் கழக செயலாளர் பொன்முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டமாக சேர்ந்து வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.