கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதுதான்!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பாதிப்பு 4 கோடியை கடந்துள்ளது.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் உலகநாடுகள் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா பரவலால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

ஓரிரு மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எடப்பாடி வைத்த ரிக்வெஸ்ட்: மீண்டும் நடைபெறும் கூவத்தூர் சம்பவம்?

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,781 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,09,473 ஆக உயர்ந்தது. புதிதாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,873 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,537 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,07,900 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.18% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 76,700 பேருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,96,18,66,707 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரத்து136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.