கொலம்பியாவில் முதல்முறையாக இடதுசாாிகள் ஆட்சி

கொலம்பியா,

கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை, மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்த நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபா் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா்.

புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்ட குஸ்டாவோ பெட்ரோ அந்நாட்டின் முன்னாள் கிளா்ச்சியாளா் குழுவில் இணைந்து செயல்பட்டாா். இதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

தோ்தலில் வெற்றி பெற்ற பின் குஸ்டாவோ பெட்ரோ மக்களிடையே உரையாற்றினாா்.

அதில், கொலம்பியாவின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிபா் மாளிகையில் வரவேற்கப்படுவார்கள். புதிதாக அமைய உள்ள அரசாங்கத்தில் அரசியல் துன்புறுத்தலோ, சட்டரீதியான துன்புறுத்தலோ இருக்காது எனவும் மரியாதையும் உரையாடலும் மட்டுமே இருக்கும்.

மேலும், ஆயுதம் ஏந்தியவர்களையும், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோாின் கருத்துகளை கேட்பேன் என அவா் தொிவித்தாா்.

சிலி, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் கடந்த 2021- ம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் இடதுசாரி கட்சியை சோ்ந்தவா்கள் அதிபா்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.