கொலையா? என போலீஸ் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மஹராஷ்டிராவில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டம் மஹிசால் என்ற பகுதியில் ஒரே வீட்டில் 9 பேர் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு இடத்தில் 3 நான்கு பேரின் உடல்கள், வேறறொரு இடத்தில் 6 பேரின் உடல்கள் என ஒன்பது பேரின் உடல்கள் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள், போபட் யால்பபா வான்மோர் , 52 என்ற டாக்டரின் குடும்பம் என்பதும் தெரியவந்தது.

latest tamil news

இது குறித்து மாவட்ட எஸ்.பி. கூறுகையில், கொலை நடந்ததற்கான தடயம் இருந்ததாக தெரியவில்லை. இவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. எனினும் விசாரணை நடத்தி வருகிறோம். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா ? தற்கொலையா என்பது தெரிவரும் என கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.