டிராவல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகிய நபருக்கு போலீஸ் வலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அய்யம்பேட்டையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தி வரும் ஃபரீனா  டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாத மாதம் லாபத்தில் பங்கு தருவதுடன், 3 வருட முடிவில் முதலீடு செய்த மொத்த பணத்தையும் திருப்பி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் லட்ச கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

சில மாதங்கள் மட்டுமே கூறியபடி பங்கு பணம் கொடுத்த ஹக்கீம், பின் பணம் கொடுப்பதை நிறுத்தியதுடன், தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தையும் பூட்டி விட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. பணத்தை இழந்த 50 க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹக்கீமை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.