திருவள்ளூர்: அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் அவதி

திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் பேட்டை செல்லும் அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் திடீரென கனமழை பெய்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் பேட்டை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
image
அப்போது பெய்த கன மழையால் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து அதன் ஓட்டை வழியாக மழைநீர் கொட்டியது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் தவித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் பேட்டை செல்ல ஒருமணி நேரத்திற்கும் மேலாகும் நிலையில், இந்த பேருந்தில் சென்ற பயணிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.