நாமக்கல்.! வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி மாரியம்மாள்(55).

இவர் கூலி வேலைக்காக எல்லைமேடு பகுதிக்கு சென்று விட்டு, வேலை முடிந்தபின் வீட்டிற்கு மோகனூர் பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியம்மாள் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று உள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாளை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.