பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.. 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது குடும்பத்தினர், உணவுடன் பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதனிடையே, பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கூறிய மருத்துவர்கள், சிறுவனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.