போர்முனையில் வசமாக சிக்கிய ரஷ்ய வீரர்கள்… ஆயுதங்களுடன் சரணடைந்து கெஞ்சிய பரிதாபம்


போர்முனையில் உக்ரேனியப் படைகளிடம் சிக்கிய பின்னர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து ரஷ்ய வீரர்கள் பலர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் இராணுவம் தொடர்பில் தகவல் வெளியிடும் டெலிகிராம் குழு ஒன்றிலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 14 ரஷ்ய வீரர்கள் கொத்தாக ஆயுதங்களை ஒப்படைத்து உக்ரைன் துருப்புகளிடம் சரணடைந்துள்ளனர்.

மேலும், உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் நடந்த கடுமையான சண்டையின் போது குறித்த வீரர்கள் உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போர்முனையில் வசமாக சிக்கிய ரஷ்ய வீரர்கள்... ஆயுதங்களுடன் சரணடைந்து கெஞ்சிய பரிதாபம்

வெளியான காட்சியில், சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் ஒரு சாலையின் ஓரத்தில் தரையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
மட்டுமின்றி, அந்த வீரர்களின் பெரும்பாலானவர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர். சிலர் காயம்பட்ட நிலையில் உள்ளனர்.

ஆனால், அந்த காட்சிகள் உக்ரைனின் எந்த பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை.
உக்ரைனின் Sieverodonetsk பகுதியில் ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்ததால் அப்பகுதியை பாதுகாக்க முயற்சிக்கும் உக்ரேனிய ஆயுதப் படைகள் பின்னடைவைச் சந்தித்தன.

இந்த நிலையிலேயே, ரஷ்ய வீரர்கள் 14 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து உக்ரைன் துருப்புகளிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்முனையில் வசமாக சிக்கிய ரஷ்ய வீரர்கள்... ஆயுதங்களுடன் சரணடைந்து கெஞ்சிய பரிதாபம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.