4வது நாளாக ராகுல் ஆஜர்| Dinamalar

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி., ராகுல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் (ஜூன் 13, 14, 15) ராகுல், டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

மொத்தம் 30 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, கடந்த 17ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தாய் சோனியாவின் உடல்நிலையை சுட்டிக்காட்டிய ராகுல், இரண்டு நாட்கள் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றிருந்தார். இதனையடுத்து, இன்று (ஜூன் 20) 4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.