O Panneerselvam vs Edappadi Palanisamy Live: அதிமுக ஒற்றை தலைமை.. இ.பி.எஸ் பதவி ஏற்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா்.

அப்போதிருந்து கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.க்கு ஆதரவாக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு சூழலில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார். இதுஒருபுறமிருக்க பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். ஒற்றை தலைமை பற்றி தீர்மானம்கூட கொண்டுவரக்கூடாது என்று ஓ.பி.எஸ். சொல்வதற்கு பெரும்பாலான தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ளது. அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
11:26 (IST) 20 Jun 2022
ஜெயக்குமார் பேட்டி!

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் தலைமையேற்க வேண்டும் என்று கூறவில்லை. நான் ஓ.பி.எஸ். பக்கமும் இல்லை, இ.பி.எஸ். பக்கமும் இல்லை. ஒற்றை தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.

11:12 (IST) 20 Jun 2022
இ.பி.எஸ் பதவி ஏற்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக மாநில இணைச் செயலாளர் வையாபுரி தலைமையில், முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

09:38 (IST) 20 Jun 2022
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம்..

சென்னை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.

09:37 (IST) 20 Jun 2022
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம்..

சென்னை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.

09:36 (IST) 20 Jun 2022
இ.பி.எஸ் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்..

அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும். தமிழக மக்களுக்கு 4 ஆண்டு நல்லாட்சியை கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.