ஒரே நாளில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்| Dinamalar

ராஞ்சி,:ஜார்க்கண்ட்டில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜார்க்கண்ட்டின் பாண்டா கிராமத்தில் வசிக்கும் சந்தீப் ஓரான் என்பவர், அதே ஊரில் வசிக்கும் குசும் லக்ரா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தார்.
இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சந்தீப் சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை பார்த்த சுவாதி குமாரி என்ற பெண் மீது சந்தீப் காதல் வயப்பட்டார். இந்த காதல் விவகாரம் சந்தீப் பெற்றோருக்கும், குசும் லக்ரா பெற்றோருக்கும் தெரிய வந்தது.
இரு குடும்பத்தினரும் சந்தீப் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், குசும் லக்ரா, சுவாதி குமாரி இருவரையும் சமாதானப்படுத்திய சந்தீப் அவர்களை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இந்த திருமண முடிவுக்கு பாண்டா கிராம மக்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரையுமே உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறிய சந்தீப், கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, குசும் லக்ரா மற்றும் சுவாதி குமாரி இருவரையும் ஒரே நாளில்
திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.