“ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார்!" – விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நீரிழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்த்

இது தொடர்பாக தே.மு.தி.க தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால்… மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

அறிக்கை

மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.