தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞருக்கு நிகழ்ந்த விபரீதம்… திருவள்ளூர் அருகே சோகம்..!

இருசக்கர வாகனம் மீது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம், அரிசந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்.இவர் ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார்.  சம்பவதன்று திருவாலாங்காடு ரெயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் பாலகிருஷ்ணனுடன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ரெயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அங்கு வந்த சரக்கு ரயில் மோதியது. இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.