தந்தையை வெட்ட சென்ற மகன்.. பின்னர் அவருக்கே நிகழ்ந்த பயங்கரம்


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தன்னை வெட்ட வந்த மகனை தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவரது மகன் காசிராஜன் அடிக்கடி தந்தையிடம் சொத்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காசிராஜன் தனது தந்தை தமிழ் அழகன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. இதற்காக தமிழ் அழகன் தனது தம்பி கடல் ராஜா மற்றும் அவரது உறவினர் காசித்துரையுடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளிய சென்றபோது, காசிராஜன் கையில் அரிவாளுடன் அங்கு வந்துள்ளார். தனது தந்தை உட்பட மூன்று பேரையும் அவர் வெட்ட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட தமிழ் அழகன் உள்ளிட்ட மூவரும் காசிராஜனிடம் இருந்து அரிவாளை பிடிங்கியுள்ளனர்.

தந்தையை வெட்ட சென்ற மகன்.. பின்னர் அவருக்கே நிகழ்ந்த பயங்கரம்

பின்னர் ஆத்திரத்தில் காசிராஜனை கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த காசிராஜன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காசிராஜன் தாக்கியதில் காயமடைந்த தமிழ் அழகன், கடல் ராஜா, காசிதுரை ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு எதிரிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.