திருச்சி.! 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் கலிங்க முடையான்பட்டியை சேர்ந்த முருகன்-அனுராதா தம்பதியரின் மகள் அனுஷ்யா.

இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி தாய், அனுசுயாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த அனுசியா நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் அனுராதா, மகள் இறந்த துக்கம் தாளாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அனுராதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.