தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்

ஐதராபாத்: சம்பள உயர்வு கோரி தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 3 வருடங்களுக்கு ஒருமுறை தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இந்த ஆண்டில் இதுவரையிலும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இதைக் கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் இன்று முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களும் பாதிக்கும் என்று தெரிகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.