பாரபட்சம் பார்ப்பதில்லை ; தலைமை நீதிபதி பேச்சு| Dinamalar

புதுடில்லி,:”இந்திய நீதித்துறை, உள்நாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் எவ்வித பாகுபாடும் இன்றி சமமாகவே பார்க்கிறது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
தெரிவித்துள்ளார்.டில்லியில் இந்திய – ஜெர்மனி வர்த்தக சபையின் ஆண்டு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் என்.வி.ரமணா பேசியதாவது: இந்திய நீதித்துறை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசியல் சாசன உரிமைகளை பாதுகாத்து வருகிறது.

சமீப ஆண்டுகளாக நிறுவனங்கள் இடையிலான மத்தியஸ்த நடவடிக்கைகளில் நீதிமன்றங்களின் தலையீடு அதிகரித்து வருவதாக சிலர் நினைக்கலாம்.
ஆனால், இந்திய நீதிமன்றங்கள் எப்போதுமே மத்தியஸ்த முடிவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றன என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் இந்திய நீதித் துறை சமமாகவே பார்க்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.