மது போதையில் தகராறில் ஈடுப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச்சு..!

மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிந்தாபுரம் பகுதியில் டீக்கடை உள்ளது. அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அவரை மிரட்டி சிகிரெட் வாங்கியுள்ளனர். பின்னர், அங்கு பணிபுரியும் நபரை தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்தனர். மேலும், அங்கிருந்தவர்களையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவால்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.