வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி 40 சதவீதம் வரை குறையும் என கணிப்பு

வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி நடப்பாண்டு 40 சதவீதம் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிறைவுசெய்யப்பட்ட இரும்பு பொருட்களுக்கான ஏற்றுமதி வரி 15 சதவீதம் விதிக்கப்பட்டதால் கடந்த நிதியாண்டில் 18.3 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு ஏற்றுமதி தற்போது 10 முதல் 12 மில்லியன் டன்னாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரும்பு தாது மீதான வரி 50 சதவீதமாகவும், துகள்கள் மீதான வரி 45 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு 26 மெட்ரிக் டன்னாக இருந்த அதன் ஒருங்கிணைந்த ஏற்றுமதி நடப்பு ஆண்டு 8 முதல் 10 மெட்ரிக் டன்னாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.