வானில் திடீரென நீல வண்ண சுருள் தோன்றியதால் மக்கள் பீதி

நியூசிலாந்தில் வானத்தில் திடீரென நீல வண்ணத்தில் சுருள் போன்று தோன்றின.

இணையத்தில் புகைப்படங்கள் வேகமாக பரவிய நிலையில், ஏலியன்களின் பறக்கும் தட்டு என சந்தேகத்தை கிளப்பியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் தொலைத் தொடர்பு செயற்கைகோளை சுற்றுபாதைக்கு கொண்டு சென்ற போது நீள வர்ண சுருள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ராக்கெட்டின் உந்துசக்தி மூலம் வெளியேறும் புகை காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் கலந்து சூரிய ஒளியில் படும் போது வண்ண சுருள் உருவாகியிருக்கலாம் என ஆக்லாந்து பல்கலைகழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.