வெள்ளத்தில் சீனா| Dinamalar

பீஜிங், : சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த கோடை மழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாகின. தெருக்களில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிறிய வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். குவாங்ஜி மாகாணத்தில் வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகினர். அதே போல குவாங்டான் மாகாணத்தில் போஷான் நகரை கடும் சூறாவளி தாக்கியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஏராளனமான வாகனங்கள் சேதமடைந்தன. எனினும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.