3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்| Dinamalar

ராய்ப்பூர்: சத்தீஷ்கர், ஒடிசா எல்லையில் நடந்த நக்சல்கள் தேடுதல் வேட்டையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சத்தீஷ்கர், ஒடிசா மாநில எல்லைப்பகுதியான நெளபாடா என்ற வனப்பகுதி நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு நக்சல்கள் தேடுதல் வேட்டைக்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது. . இப்பாதையில் இன்று மத்திய சி.ஆர்.பி.எப்., படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் மறைந்திருந்த நடத்திய திடீர் தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 12 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.