அக்னி வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் அளிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அறிவிப்பு

ராணுவத்தில் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு வீரதீர சாகசங்களுக்கான விருதுகள் அளிக்கப்படும் என்று ராணுவ விவகாரங்களுக்கான துறை அறிவித்துள்ளது.

ராணுவப் பணி என்பது வேலைவாய்ப்புக்கான இடம் அல்ல, அது தேசபக்தியுடன் உணர்வுப் பூரவமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு என்று ராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 பேரில் ஒருவர் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் தகுதி அடிப்படையில் மிகச்சிறந்தவரே ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவதாகவும் தேர்வு முறை வெளிப்படையாக இருக்கும் என்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.