அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாரணாசி: ராணுவத்தின் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சேதத்துக்காக, போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலிக்க உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில், முப்படையில் அக்னிபத் என்ற புதிய வேலை வாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ரயில், பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். ஏராளமான பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இந்நிலையில், இந்த சேதத்துக்கான தொகையை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.

latest tamil news

இது பற்றி வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா கூறியதாவது: வாரணாசி மாவட்டத்தில் ஜூன் 17ம் தேதி போராட்டக்காரர்கள் 36 பஸ்களை எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு, 12.97 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சேதத்தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களை எரித்த 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடைய புகைப்படங்களும், ‘வீடியோ’ ஆதாரங்களும் பிரயாக்ராஜ் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.