ஆப்கனில் பயங்கர பூகம்பம்: 255 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காபூல்: ஆப்கனின் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 255 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் ரிக்டரில் 6 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 255 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறித்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல வெளியேறிவிட்டனர். இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அனைத்து தொண்டு நிறுவனங்களும் உதவி செய்யும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

latest tamil news

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

அதேநேரத்தில் ஐரோப்பிய புவியியல் மையம், பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் உணரப்பட்டதாகவும், பூகம்பம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 500 கி.மீ., சுற்றளவுக்கு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.