ஜெர்மனி பறக்கும் பிரதமர் மோடி.. ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

ஜெர்மனி நாட்டில் நடைபெற உள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ஜெர்மனி நாட்டில் வரும் 26, 27 தேதிகளில் ஜி – 7 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல இருக்கிறார். இதனை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இரு நாட்கள் நடைபெறும் உச்சி மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் சந்தித்து பேச இருக்கிறார்.

இந்தப் யணத்தை முடித்துக் கொண்டு வரும் 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு அவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரு தலைவர்களும் முத ல்முறையாக சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.