தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக அளவாகத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் 8 சென்டிமீட்டரும், சென்னையில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.