நக்சல்கள் தாக்குதல்: 3 வீரர்கள் உயிரிழப்பு| Dinamalar

புதுடில்லி : ஒடிசாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.

ஒடிசாவின் நவ்படா மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் துணை ராணுவ படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த நக்சல் இயக்கத்தினர், நவீன ரக கையெறி குண்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதில், துணை ராணுவ படையின் இரண்டு சப் — இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு வீரர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.