அமெரிக்காவில் 130 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீப்பிடித்த விமானம்..!

அமெரிக்காவின் மியாமியில் 140 பேருடன் தரையிறங்கிய விமானத்தில் தீப்பிடித்ததில் பயணிகள் மூவர் காயமடைந்தனர்.

டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த விமானத்தில் 130 பயணியரும், விமானிகள் பணியாளர்கள் 10 பேரும் இருந்தனர்.

மியாமி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை ஐந்தரை மணிக்கு அந்த விமானம் தரையிறங்கியபோது சக்கரம் உடைந்ததால் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதுடன் அதில் தீப்பிடித்தது.

உடனடியாகத் தீயை அணைத்ததுடன் அதிலிருந்த பயணியர் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மூவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.