” என்ன பாத்தா எப்டி தெரியுது?”.. ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெயிலர் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தற்போது படக்குழுவினர் புதிய ட்ரெயிலரை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ட்ரையிலர் வெளியிடப்பட்டுள்ளது. 1:10 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய ட்ரெயிலரில் பழைய ட்ரெயிலரில் இல்லாத காட்சிகளும், சில புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு, முதல் ட்ரெயிலரை விட காட்சிகள் சுருக்கப்பட்டுள்ளது.

image

இந்தப் படத்தில் நடிகர் மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர். அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு பலரின் பாராட்டை பெற்றது. மேலும், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையான, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ஒளிப்பரப்பட்டது.

image

மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். அப்போது அவர் சந்தித்த பிரச்னைகளை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.