டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…

சென்னை: டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில்   மதுவகைகளை வாங்கி குடித்து விட்டு,காலி மதுபாட்டில்களை வனப்பகுதி மற்றும்  சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால் சுழல் பாதிக்கப்படுகின்றது. மேலும் வனப்பகுதியில் குடித்துவிட்டு உடைந்து போடப்படும் மதுபாட்டில் கண்ணாடி  துண்டுகள் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் கால்களில்  பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பான வழக்கில், சுகாதாரத்சீர் கேடுகளை ஏற்படுத்தி மாசுப்படுத்தும் காலி மதுபாட்டில்களை தமிழகஅரசே கொள்முதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் மது கடையில் திரும்ப கொடுத்து 10 ரூபாயினை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டத. அதைத்தொடர்ந்து, கொடைக்கானலில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கிபயன்படுத்திய பின்னர்  காலி மது பாட்டில்களை மீண்டும்  டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான வழக்கில், இந்த நடைமுறையை மாநிலம் முழுவதும் கொண்டுவருவது குறித்து தமிழகஅரசு ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, டாஸ்மாக்  காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என கூறிய நீதிபதிகள், இதுதொடர்பான திட்டத்தை வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.