திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று கோயிலில் 68,873 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,952 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ4.44 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.இன்று காலை நிலவரப்படி திருமலையில் பக்தர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். அதிகளவு பக்தர்களால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் நிரம்பி கோயில் ஆஸ்தான மண்டபம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.