இமாச்சலபிரதேசம்: அக்னிவீரர்களுக்கு வேலை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் – மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!

சிம்லா,

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் இன்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ள, அக்னிபத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முடிவில், அக்னிபத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர்களுக்கு அதன்பின்னர் வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதை, மாநில அரசு உறுதி செய்யும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.