கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாகிப் பெயர் பெற்று விளங்கியதைச் சுட்டிக் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரக்தி மனோபாவம் வேண்டாம் என்றும், யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், கல்லூரிக் கனவு என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.