#காஞ்சிபுரம் || தொழிற்சாலையில் கிரேன் மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.!

காஞ்சிபுரத்தில் தொழிற்சாலையில் கிரேன் மோதியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கோரோல் சிங் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக வந்த கிரேன் கோரோல் சிங் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோரோல் சிங் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கோரல் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.