கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி ரூ.20 கோடி வசூலித்து விபூதி அடித்த பூசாரிகள்..!

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் தேவலகனாபூர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பூசாரிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் கோயிலின் பெயரில் 8 இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் இருந்து வழிபாட்டுக் கட்டணம், நன்கொடை என்ற பெயரில் மோசடி செய்துள்ளனர்.

பல்வேறு பூஜைகளுக்காக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்த ஐந்து பூசாரிகள், கோயிலின் உண்டியல் பணத்தையும் திருடிய காட்சியும் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.