“புதியவகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடிய வீரியமுடையது, ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு” – அமைச்சர் மா.சு

தற்போது பரவக்கூடிய பிஏ 4, பிஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய அளவுக்கு வீரியமுடையதால், அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது பரவக்கூடிய பிஏ 4, பிஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய அளவுக்கு வீரியமுடையது என்றும், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவும் என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.