இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 4 பேர் படுகாயம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகாசியை சேர்ந்த கோகுல் மற்றும் மதுரை திருநகரை சேர்ந்த பிரவீன் ஆகிய இருவரும் திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விளக்கில் நாற்கரசாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது கோகுல் ஓட்டி வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் சாலையில் இருந்த பாலத்தைத் தாண்டி 50 மீட்டர் பள்ளத்தில் தலைகிழாக விழுந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இதில் பிரவின் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மற்றொரு காரில் வந்த ஓட்டுநர் ராஜா மற்றும் காரில் வந்த விஜயலட்சுமி, ஜோதிலட்சுமி ஆகிய மூன்று பேரும் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.