சென்னை || ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ..!

மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, காட்டுப்பாக்கத்தில் தனியார் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அங்குள்ள பொருட்களில் பரவியதால் மளமளவென தீப்பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை  அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில்  மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.