திங்கட்கிழமை 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ‘செக்’ செய்வது எப்படி?

தமிழகத்தில், 2022 மே மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 27) வெளியாகிறது. அதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுஎழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை திங்கட்கிழமை (ஜூன் 27) வெளியாகிறது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.