மீண்டும் பரவும் கொரோனா…. குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தன் வேலையை காட்ட துவங்கியுள்ளது. கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கால்லில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுகூடங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், சலூன்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

கருக்கலைப்பு உரிமை ரத்து: அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு!

மக்காவோ நகரத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடை.யே, சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளன. ஏற்கெனவே தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் புதிததாக தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதே இதற்கு காரணம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.