PMB அரிசி நாளை முதல் சந்தைக்கு விநியோகம்

நெல் சந்தைப்படுத்தல் சபை கையிருப்பிலுள்ள நெல்லைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள PMB என்ற அரிசி சந்தைக்கு உத்தியோகபூர்வமாக நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

ஐந்து கிலோ மற்றும் 10 கிலோ பொதிகளாக இந்த அரிசி விநியோகிக்கப்படுமென்று விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பத்தரமுல்லை விவசாய அமைச்சின் வளவில் விற்பனைக் கூடமும் திறக்கப்படவுள்ளது. இங்கு பாலுடன் தொடர்பான தயாரிப்புகள், முட்டை என்பனவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அரிசி பொதிகள் கொழும்பு மாவட்டத்தில் உணவு மேம்பாட்டு சபைக்கு உட்பட்ட 3 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.