ஆப்கன் நிலநடுக்கத்தில் சிறார் பலி 155 ஆக உயர்வு| Dinamalar

கயன்,-கடந்த வாரம் ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த சிறார்களின் எண்ணிக்கை, 155 ஆக உயர்ந்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனின் பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், கடந்த வாரம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மலை சூழ்ந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றில், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி, 1,150 பேர் இறந்ததாக, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. எனினும், ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு நிறுவனம், 770 பேர் இறந்ததாக கூறியுள்ளது. இந்த கோர நிகழ்வில் உயிரிழந்த சிறார்கள் எண்ணிக்கை, 155 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில், மேலும் பலர் அபாய கட்டத்தில் உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. ஐ.நா., மனிதநேய ஒருங்கிணைப்பு நிறுவனம், பெற்றோரை பிரிந்த சிறார்களை அடையாளம் கண்டு ஒன்றுசேர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், நிலநடுக்கத்தால் பாதிப்பிற்கு ஆளான சிறார்களுக்கு, மன நல மருத்துவர்களின் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.