இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை| Dinamalar

நியூயார்க்,-அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர், நண்பர் ஒருவரிடம் கார் இரவல் கேட்டு வாங்கியுள்ளார். அந்த காரை, ஒரு பூங்கா அருகில் நிறுத்தி விட்டு, சத்னம் சிங் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, வேறொரு காரில் வந்த மர்ம நபர்கள், சத்னம் சிங்கை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

குண்டு சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, சத்னம் சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த கொலை குறித்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வாரம், மேரிலாண்டு நகரில், ஹைதராபா தைச் சேர்ந்த சாய் சரண் என்பவர், தலையில் குண்டு காயத்துடன் காரில் இறந்து கிடந்தார். ஒரு வார இடைவெளியில், அடுத்தடுத்து இரு இந்தியர்கள் கொல்லப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.