உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் அவர்கள் மூலமாகவே அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாகவும், அறங்காவலர்கள் இல்லையெனில் தக்கார்கள் மூலம் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையேற்ற நீதிபதிகள், அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.